Wednesday, May 18, 2011

சிறுகதை -பந்தயக்குதிரை





வகுப்பறையில் கடைசி வாங்கின் அந்தத்தில் ஓரமாக எப்போதும் அவனைக் காணலாம். உற்சாகம் கரை புரண்டு சத்தமிட்டபடி வகுப்பிற்குள் ஓடியாடித் திரியும் மாணவர்களிடையே எந்தவித சலனமுமில்லாமல் புத்தகமொன்றைப் புரட்டியபடி அவனிருப்பதை நான் பலமுறை கண்டிருக்கிறேன். குழப்படிக்காரர்கள் அவனது புத்தகத்தைப் பறித்துச் சீண்டினார்கள். அவ்வாறு சீண்டிய மாணவர்கள் பலரும் என்முன்னால் நிறுத்தப்பட்டனர். அவர்கள் தொடர்பில் அவன் என்னிடம் எப்போதும் குற்றச் சாட்டுக்களை முன்வைத்ததில்லை. சக மாணவர்கள்தான் அதை முன்வைத்தார்கள்.

அவன் அமைதியாக, தன்னடக்கமாக இருந்தான். அவனிடம் உற்சாகமான மனநிலையிருக்க வில்லையென்று நான் கருதினேன். ஆனால் அவனது உற்சாகம் அவனுடைய கண்களில் இருப்பதாகவே பின்னர் எனக்குத் தோன்றியது. புத்தகங்களைப் படிக்கும் போது அவனது விழிகளில் உற்சாகம் கரைபுரண்டு ஓடுவதை நான் அவதானித்திருக்கிறேன்.


எனது வகுப்பிலுள்ள மாணவர்களில் பெரும்பாலானோர் நகரத்தின் பெரும் புள்ளிகளது பிள்ளைகள். மருத்துவர்கள், பொறியியலாளர்கள், திணைக்கள அதிகாரிகள், பெருவணிகர்கள் போன்றோரின் பிள்ளைகளாகவே அவர்கள் இருந்தனர். ஆடம்பரமும் கம்பீரமும் மிடுக்கும் அவர்களிடம் குடியிருந்தன. எல்லா வகைகளிலும் அவர்கள் போட்டி போட்டுக் கொண்டிருந்தனர்.

புதிது புதிதாகப் புத்தகப்பைகளும், பயிற்சிப் புத்தகங்களும். சப்பாத்துக்களும் வாங்கி வருவார்கள். அவை பற்றித் தமக்குள் பெருமை பாராட்டுவார்கள். ஒருவன் வாங்கியதை விடச் சிறந்ததொன்றுடன் மற்றொருவன் வந்து அடுத்தநாள் அது பற்றிப் பெருமையாகக் கூறுவான். இப்படியே புதிய புதிய சங்கதிகள் ஒவ்வொரு நாளும் என் காதுக்கும்; எட்டும்.

பெரும்பாலான மாணவர்கள் வீட்டில் பெற்றோருடன் அலசிய விடயங்களைச் சொல்வார்கள். அவை சுயதம்பட்டங்களாகவோ, மற்றவரை ஏளனப்படுத்துவனவாகவோ இருந்தன. பிள்ளைகளின் கதைகளை நான் அலட்சியம் செய்வதில்லை. அதிக ஆர்வம் காட்டுவதுமில்லை. ஆனால் மற்றவர்கள் போல அவன் ஒருபோதும் அவ்வாறு நடந்து கொண்டதில்லை. தன்னைப் பற்றியோ, வேறு சம்பவங்கள் பற்றியோ கூட அவன் எதையும் சொன்னதில்லை. மற்றவர்கள் பிரலாபிக்கும் வேளைகளில் அவற்றில் அவன் ஆர்வம் காட்டியதில்லை.

நான் கற்பிக்கும் வேளைகளில் தீட்சண்யத்துடன் அவன் என்னை நோக்குவதை அவதானித்திருக்கிறேன். மற்றவேளைகளில் தலையைக் குனிந்தபடி புத்தகங்களில் கண்களை மேய விட்டிருப்பான். இல்லையென்றால் சாளரங்க@டாக நேரே தென்படும் மைதானத்தையோ, அதன் ஓரமாக நெடிதுயர்ந்து நிற்கும் புளியமரத்தையோ பார்த்துக் கொண்டிருப்பான். ஆரம்பத்தில் ஓரிரு தடவைகள் அப்படிப் பார்ப்பதையிட்டு அவனைக் கடிந்து பேசியிருக்கிறேன். அந்தக் கணங்களில் திடுக்குற்று மிரள விளித்து, என்னைப் பார்ப்பான். பிறகு தலையைக் குனிந்து கொள்வான்.

'என்னசேர்.... உங்கடை வகுப்பிலிருக்கிற சைதன்யன் பாட்டுப் பாடுறானில்லை. கல்லுளி மங்கன் போலை பேசாமல் நிற்கிறான்" என்ற குற்றச்சாட்டை அழகியல் கற்பிக்கும் மேரி ரீச்சர் முதலில் முன்வைத்தார். பின்னர் சிறுவர் நாடகப் போட்டிக்கு மாணவர்களைத் தேர்வு செய்த ஆசிரியரும் அவனிடமிருந்து எந்த வெளிப்பாடுமில்லையென்று குறை கூறினார். வரவுப் பதிவின்போது 'பிறசன்ற் சேர்" என்று கூறுவதைத் தவிர அவனது குரலைக் கேட்க முடியவில்லைத்தான்.



மறுநாள் காலையில் பத்திரிகைகளில் அவனது படம் வந்திருந்தது. கூடவே பாடசாலை பாராட்டி வாழ்த்திப் பெருமயை வெளிப்படுத்தியிருந்தது. வகுப்பாசிரியரது பிரத்தியேக ரியூசனும் தமது நிறுவனத்தின் சிறப்பான மாணவனாக சைதன்யனை இனங்காட்டி, அவனது சாதனையைப் பாராட்டி விளம்பரம் தேடியிருந்தது.



சைதன்யன் இப்போது தேசியப் பாடசாலையொன்றில் ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த, பிரபலங்களின் பிள்ளைகள் பலரும் அவனுடன் கூடப் படித்தனர். அவனிடம் முன்பைவிட உற்சாகமும் துருதுருப்பும் கூடியிருந்தன. எனினும் புத்தக வாசிப்பும் அவனுடன் கூடவேயிருந்தது.

'உனது நண்பர்கள் யார்?" என்று ஒருமுறை அவனிடம் கேட்டேன்.
'எனக்கு எல்லோரும் நண்பர்கள்தான். ஆனால் அவர்கள்தான் என்னைத் தங்கடை நண்பர்களாகக் கருதவில்லை." என்று அவன் பதிலிறுத்தான். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. மீண்டும் அவன் தொடர்பில் அக்கறை காட்டினேன். அப்போதுதான் அவனது பெறுபேறே அவனுக்கு எதிரியாயிருந்ததைக் கண்டு கொண்டேன்.

அவனுக்குக் கற்பிக்கும் ஆசிரியரொருவரும் ரியூசன் சென்ரர் வைத்திருந்தார். அதில் சேருமாறு சைதன்யனைப் பலமுறை கேட்டும் அவன் சேரவில்லை. அதனால் அவர் அடிக்கடி அவனை இகழ்ந்து பேசுவதாகச் சக மாணவனொருவன் என்னிடம் சொன்னான். 'காசு கட்டியா நீ ஸ்கொல~pப் பாஸ் பண்ணினாய்?" என்றும் அவர் கேட்டாராம். எனக்கு இதைக் கேட்கும் போதே கோபமாயிருந்தது. கண்களும் கலங்கின. தவணைப் பரீட்சையில் அந்த ஆசிரியரது பாடத்தில் அவன் புள்ளிகளில் பின்தள்ளப்பட்டான். உயர் புள்ளி பெற்றவனோ 'நீ காசாலை என்னை முந்தினாய். இப்ப நான் உண்மையாய் முந்தீட்டன்... பார்த்தியா?" என்று ஏளனஞ் செய்தான். அவனைப் போலவே சக மாணவர்கள் பலரும் சைதன்யனை பொறாமையோடுதான் நோக்கினர்.

எனக்குச் சங்கடமாயிருந்தது. இப்படியே விட்டால் அவனது உளநிலை பாதிக்கப்பட்டுவிடும். வேறு பாடசாலைக்கு அவனை மாற்றுவது நல்லதெனப்பட்டது. அவனை அணுகி ஆறுதல் கூறினேன். வேறு பாடசாலைக்கு மாறி விடுமாறு வற்புறுத்தினேன். அவனோ அதைப் பொருட்படுத்தாமல் சிரித்தான்.

'சேர், நல்ல மனப்பாங்கு பற்றி இந்தச் சேர்தான் எனக்குச் சொல்லித் தந்தவர். என்னட்டை அது இருக்குது. இவரிட்டையும், மற்ற மாணவரிடத்திலையும் அது குறைவாக இருக்குப் போலை..... அதுக்காக நான் ஏன் மாற வேணும்" அவனது முதிர்ந்த வாhத்தைக@டே விழிகளின் தீட்சண்யம், ஒளிர்ந்து, சூரியக் கதிர்களாகப் பிரகாசித்து என்னை நிலை குலைய வைத்தது.









வகுப்பறையில் கடைசி வாங்கின் அந்தத்தில் ஓரமாக எப்போதும் அவனைக் காணலாம். உற்சாகம் கரை புரண்டு சத்தமிட்டபடி வகுப்பிற்குள் ஓடியாடித் திரியும் மாணவர்களிடையே எந்தவித சலனமுமில்லாமல் புத்தகமொன்றைப் புரட்டியபடி அவனிருப்பதை நான் பலமுறை கண்டிருக்கிறேன். குழப்படிக்காரர்கள் அவனது புத்தகத்தைப் பறித்துச் சீண்டினார்கள். அவ்வாறு சீண்டிய மாணவர்கள் பலரும் என்முன்னால் நிறுத்தப்பட்டனர். அவர்கள் தொடர்பில் அவன் என்னிடம் எப்போதும் குற்றச் சாட்டுக்களை முன்வைத்ததில்லை. சக மாணவர்கள்தான் அதை முன்வைத்தார்கள்.

அவன் அமைதியாக, தன்னடக்கமாக இருந்தான். அவனிடம் உற்சாகமான மனநிலையிருக்க வில்லையென்று நான் கருதினேன். ஆனால் அவனது உற்சாகம் அவனுடைய கண்களில் இருப்பதாகவே பின்னர் எனக்குத் தோன்றியது. புத்தகங்களைப் படிக்கும் போது அவனது விழிகளில் உற்சாகம் கரைபுரண்டு ஓடுவதை நான் அவதானித்திருக்கிறேன்.


எனது வகுப்பிலுள்ள மாணவர்களில் பெரும்பாலானோர் நகரத்தின் பெரும் புள்ளிகளது பிள்ளைகள். மருத்துவர்கள், பொறியியலாளர்கள், திணைக்கள அதிகாரிகள், பெருவணிகர்கள் போன்றோரின் பிள்ளைகளாகவே அவர்கள் இருந்தனர். ஆடம்பரமும் கம்பீரமும் மிடுக்கும் அவர்களிடம் குடியிருந்தன. எல்லா வகைகளிலும் அவர்கள் போட்டி போட்டுக் கொண்டிருந்தனர்.

புதிது புதிதாகப் புத்தகப்பைகளும், பயிற்சிப் புத்தகங்களும். சப்பாத்துக்களும் வாங்கி வருவார்கள். அவை பற்றித் தமக்குள் பெருமை பாராட்டுவார்கள். ஒருவன் வாங்கியதை விடச் சிறந்ததொன்றுடன் மற்றொருவன் வந்து அடுத்தநாள் அது பற்றிப் பெருமையாகக் கூறுவான். இப்படியே புதிய புதிய சங்கதிகள் ஒவ்வொரு நாளும் என் காதுக்கும்; எட்டும்.

பெரும்பாலான மாணவர்கள் வீட்டில் பெற்றோருடன் அலசிய விடயங்களைச் சொல்வார்கள். அவை சுயதம்பட்டங்களாகவோ, மற்றவரை ஏளனப்படுத்துவனவாகவோ இருந்தன. பிள்ளைகளின் கதைகளை நான் அலட்சியம் செய்வதில்லை. அதிக ஆர்வம் காட்டுவதுமில்லை. ஆனால் மற்றவர்கள் போல அவன் ஒருபோதும் அவ்வாறு நடந்து கொண்டதில்லை. தன்னைப் பற்றியோ, வேறு சம்பவங்கள் பற்றியோ கூட அவன் எதையும் சொன்னதில்லை. மற்றவர்கள் பிரலாபிக்கும் வேளைகளில் அவற்றில் அவன் ஆர்வம் காட்டியதில்லை.

நான் கற்பிக்கும் வேளைகளில் தீட்சண்யத்துடன் அவன் என்னை நோக்குவதை அவதானித்திருக்கிறேன். மற்றவேளைகளில் தலையைக் குனிந்தபடி புத்தகங்களில் கண்களை மேய விட்டிருப்பான். இல்லையென்றால் சாளரங்க@டாக நேரே தென்படும் மைதானத்தையோ, அதன் ஓரமாக நெடிதுயர்ந்து நிற்கும் புளியமரத்தையோ பார்த்துக் கொண்டிருப்பான். ஆரம்பத்தில் ஓரிரு தடவைகள் அப்படிப் பார்ப்பதையிட்டு அவனைக் கடிந்து பேசியிருக்கிறேன். அந்தக் கணங்களில் திடுக்குற்று மிரள விளித்து, என்னைப் பார்ப்பான். பிறகு தலையைக் குனிந்து கொள்வான்.

'என்னசேர்.... உங்கடை வகுப்பிலிருக்கிற சைதன்யன் பாட்டுப் பாடுறானில்லை. கல்லுளி மங்கன் போலை பேசாமல் நிற்கிறான்" என்ற குற்றச்சாட்டை அழகியல் கற்பிக்கும் மேரி ரீச்சர் முதலில் முன்வைத்தார். பின்னர் சிறுவர் நாடகப் போட்டிக்கு மாணவர்களைத் தேர்வு செய்த ஆசிரியரும் அவனிடமிருந்து எந்த வெளிப்பாடுமில்லையென்று குறை கூறினார். வரவுப் பதிவின்போது 'பிறசன்ற் சேர்" என்று கூறுவதைத் தவிர அவனது குரலைக் கேட்க முடியவில்லைத்தான்.



மறுநாள் காலையில் பத்திரிகைகளில் அவனது படம் வந்திருந்தது. கூடவே பாடசாலை பாராட்டி வாழ்த்திப் பெருமயை வெளிப்படுத்தியிருந்தது. வகுப்பாசிரியரது பிரத்தியேக ரியூசனும் தமது நிறுவனத்தின் சிறப்பான மாணவனாக சைதன்யனை இனங்காட்டி, அவனது சாதனையைப் பாராட்டி விளம்பரம் தேடியிருந்தது.



சைதன்யன் இப்போது தேசியப் பாடசாலையொன்றில் ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த, பிரபலங்களின் பிள்ளைகள் பலரும் அவனுடன் கூடப் படித்தனர். அவனிடம் முன்பைவிட உற்சாகமும் துருதுருப்பும் கூடியிருந்தன. எனினும் புத்தக வாசிப்பும் அவனுடன் கூடவேயிருந்தது.

'உனது நண்பர்கள் யார்?" என்று ஒருமுறை அவனிடம் கேட்டேன்.
'எனக்கு எல்லோரும் நண்பர்கள்தான். ஆனால் அவர்கள்தான் என்னைத் தங்கடை நண்பர்களாகக் கருதவில்லை." என்று அவன் பதிலிறுத்தான். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. மீண்டும் அவன் தொடர்பில் அக்கறை காட்டினேன். அப்போதுதான் அவனது பெறுபேறே அவனுக்கு எதிரியாயிருந்ததைக் கண்டு கொண்டேன்.

அவனுக்குக் கற்பிக்கும் ஆசிரியரொருவரும் ரியூசன் சென்ரர் வைத்திருந்தார். அதில் சேருமாறு சைதன்யனைப் பலமுறை கேட்டும் அவன் சேரவில்லை. அதனால் அவர் அடிக்கடி அவனை இகழ்ந்து பேசுவதாகச் சக மாணவனொருவன் என்னிடம் சொன்னான். 'காசு கட்டியா நீ ஸ்கொல~pப் பாஸ் பண்ணினாய்?" என்றும் அவர் கேட்டாராம். எனக்கு இதைக் கேட்கும் போதே கோபமாயிருந்தது. கண்களும் கலங்கின. தவணைப் பரீட்சையில் அந்த ஆசிரியரது பாடத்தில் அவன் புள்ளிகளில் பின்தள்ளப்பட்டான். உயர் புள்ளி பெற்றவனோ 'நீ காசாலை என்னை முந்தினாய். இப்ப நான் உண்மையாய் முந்தீட்டன்... பார்த்தியா?" என்று ஏளனஞ் செய்தான். அவனைப் போலவே சக மாணவர்கள் பலரும் சைதன்யனை பொறாமையோடுதான் நோக்கினர்.

எனக்குச் சங்கடமாயிருந்தது. இப்படியே விட்டால் அவனது உளநிலை பாதிக்கப்பட்டுவிடும். வேறு பாடசாலைக்கு அவனை மாற்றுவது நல்லதெனப்பட்டது. அவனை அணுகி ஆறுதல் கூறினேன். வேறு பாடசாலைக்கு மாறி விடுமாறு வற்புறுத்தினேன். அவனோ அதைப் பொருட்படுத்தாமல் சிரித்தான்.

'சேர், நல்ல மனப்பாங்கு பற்றி இந்தச் சேர்தான் எனக்குச் சொல்லித் தந்தவர். என்னட்டை அது இருக்குது. இவரிட்டையும், மற்ற மாணவரிடத்திலையும் அது குறைவாக இருக்குப் போலை..... அதுக்காக நான் ஏன் மாற வேணும்" அவனது முதிர்ந்த வாhத்தைக@டே விழிகளின் தீட்சண்யம், ஒளிர்ந்து, சூரியக் கதிர்களாகப் பிரகாசித்து என்னை நிலை குலைய வைத்தது.









வகுப்பறையில் கடைசி வாங்கின் அந்தத்தில் ஓரமாக எப்போதும் அவனைக் காணலாம். உற்சாகம் கரை புரண்டு சத்தமிட்டபடி வகுப்பிற்குள் ஓடியாடித் திரியும் மாணவர்களிடையே எந்தவித சலனமுமில்லாமல் புத்தகமொன்றைப் புரட்டியபடி அவனிருப்பதை நான் பலமுறை கண்டிருக்கிறேன். குழப்படிக்காரர்கள் அவனது புத்தகத்தைப் பறித்துச் சீண்டினார்கள். அவ்வாறு சீண்டிய மாணவர்கள் பலரும் என்முன்னால் நிறுத்தப்பட்டனர். அவர்கள் தொடர்பில் அவன் என்னிடம் எப்போதும் குற்றச் சாட்டுக்களை முன்வைத்ததில்லை. சக மாணவர்கள்தான் அதை முன்வைத்தார்கள்.

அவன் அமைதியாக, தன்னடக்கமாக இருந்தான். அவனிடம் உற்சாகமான மனநிலையிருக்க வில்லையென்று நான் கருதினேன். ஆனால் அவனது உற்சாகம் அவனுடைய கண்களில் இருப்பதாகவே பின்னர் எனக்குத் தோன்றியது. புத்தகங்களைப் படிக்கும் போது அவனது விழிகளில் உற்சாகம் கரைபுரண்டு ஓடுவதை நான் அவதானித்திருக்கிறேன்.


எனது வகுப்பிலுள்ள மாணவர்களில் பெரும்பாலானோர் நகரத்தின் பெரும் புள்ளிகளது பிள்ளைகள். மருத்துவர்கள், பொறியியலாளர்கள், திணைக்கள அதிகாரிகள், பெருவணிகர்கள் போன்றோரின் பிள்ளைகளாகவே அவர்கள் இருந்தனர். ஆடம்பரமும் கம்பீரமும் மிடுக்கும் அவர்களிடம் குடியிருந்தன. எல்லா வகைகளிலும் அவர்கள் போட்டி போட்டுக் கொண்டிருந்தனர்.

புதிது புதிதாகப் புத்தகப்பைகளும், பயிற்சிப் புத்தகங்களும். சப்பாத்துக்களும் வாங்கி வருவார்கள். அவை பற்றித் தமக்குள் பெருமை பாராட்டுவார்கள். ஒருவன் வாங்கியதை விடச் சிறந்ததொன்றுடன் மற்றொருவன் வந்து அடுத்தநாள் அது பற்றிப் பெருமையாகக் கூறுவான். இப்படியே புதிய புதிய சங்கதிகள் ஒவ்வொரு நாளும் என் காதுக்கும்; எட்டும்.

பெரும்பாலான மாணவர்கள் வீட்டில் பெற்றோருடன் அலசிய விடயங்களைச் சொல்வார்கள். அவை சுயதம்பட்டங்களாகவோ, மற்றவரை ஏளனப்படுத்துவனவாகவோ இருந்தன. பிள்ளைகளின் கதைகளை நான் அலட்சியம் செய்வதில்லை. அதிக ஆர்வம் காட்டுவதுமில்லை. ஆனால் மற்றவர்கள் போல அவன் ஒருபோதும் அவ்வாறு நடந்து கொண்டதில்லை. தன்னைப் பற்றியோ, வேறு சம்பவங்கள் பற்றியோ கூட அவன் எதையும் சொன்னதில்லை. மற்றவர்கள் பிரலாபிக்கும் வேளைகளில் அவற்றில் அவன் ஆர்வம் காட்டியதில்லை.

நான் கற்பிக்கும் வேளைகளில் தீட்சண்யத்துடன் அவன் என்னை நோக்குவதை அவதானித்திருக்கிறேன். மற்றவேளைகளில் தலையைக் குனிந்தபடி புத்தகங்களில் கண்களை மேய விட்டிருப்பான். இல்லையென்றால் சாளரங்க@டாக நேரே தென்படும் மைதானத்தையோ, அதன் ஓரமாக நெடிதுயர்ந்து நிற்கும் புளியமரத்தையோ பார்த்துக் கொண்டிருப்பான். ஆரம்பத்தில் ஓரிரு தடவைகள் அப்படிப் பார்ப்பதையிட்டு அவனைக் கடிந்து பேசியிருக்கிறேன். அந்தக் கணங்களில் திடுக்குற்று மிரள விளித்து, என்னைப் பார்ப்பான். பிறகு தலையைக் குனிந்து கொள்வான்.

'என்னசேர்.... உங்கடை வகுப்பிலிருக்கிற சைதன்யன் பாட்டுப் பாடுறானில்லை. கல்லுளி மங்கன் போலை பேசாமல் நிற்கிறான்" என்ற குற்றச்சாட்டை அழகியல் கற்பிக்கும் மேரி ரீச்சர் முதலில் முன்வைத்தார். பின்னர் சிறுவர் நாடகப் போட்டிக்கு மாணவர்களைத் தேர்வு செய்த ஆசிரியரும் அவனிடமிருந்து எந்த வெளிப்பாடுமில்லையென்று குறை கூறினார். வரவுப் பதிவின்போது 'பிறசன்ற் சேர்" என்று கூறுவதைத் தவிர அவனது குரலைக் கேட்க முடியவில்லைத்தான்.



மறுநாள் காலையில் பத்திரிகைகளில் அவனது படம் வந்திருந்தது. கூடவே பாடசாலை பாராட்டி வாழ்த்திப் பெருமயை வெளிப்படுத்தியிருந்தது. வகுப்பாசிரியரது பிரத்தியேக ரியூசனும் தமது நிறுவனத்தின் சிறப்பான மாணவனாக சைதன்யனை இனங்காட்டி, அவனது சாதனையைப் பாராட்டி விளம்பரம் தேடியிருந்தது.



சைதன்யன் இப்போது தேசியப் பாடசாலையொன்றில் ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த, பிரபலங்களின் பிள்ளைகள் பலரும் அவனுடன் கூடப் படித்தனர். அவனிடம் முன்பைவிட உற்சாகமும் துருதுருப்பும் கூடியிருந்தன. எனினும் புத்தக வாசிப்பும் அவனுடன் கூடவேயிருந்தது.

'உனது நண்பர்கள் யார்?" என்று ஒருமுறை அவனிடம் கேட்டேன்.
'எனக்கு எல்லோரும் நண்பர்கள்தான். ஆனால் அவர்கள்தான் என்னைத் தங்கடை நண்பர்களாகக் கருதவில்லை." என்று அவன் பதிலிறுத்தான். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. மீண்டும் அவன் தொடர்பில் அக்கறை காட்டினேன். அப்போதுதான் அவனது பெறுபேறே அவனுக்கு எதிரியாயிருந்ததைக் கண்டு கொண்டேன்.

அவனுக்குக் கற்பிக்கும் ஆசிரியரொருவரும் ரியூசன் சென்ரர் வைத்திருந்தார். அதில் சேருமாறு சைதன்யனைப் பலமுறை கேட்டும் அவன் சேரவில்லை. அதனால் அவர் அடிக்கடி அவனை இகழ்ந்து பேசுவதாகச் சக மாணவனொருவன் என்னிடம் சொன்னான். 'காசு கட்டியா நீ ஸ்கொல~pப் பாஸ் பண்ணினாய்?" என்றும் அவர் கேட்டாராம். எனக்கு இதைக் கேட்கும் போதே கோபமாயிருந்தது. கண்களும் கலங்கின. தவணைப் பரீட்சையில் அந்த ஆசிரியரது பாடத்தில் அவன் புள்ளிகளில் பின்தள்ளப்பட்டான். உயர் புள்ளி பெற்றவனோ 'நீ காசாலை என்னை முந்தினாய். இப்ப நான் உண்மையாய் முந்தீட்டன்... பார்த்தியா?" என்று ஏளனஞ் செய்தான். அவனைப் போலவே சக மாணவர்கள் பலரும் சைதன்யனை பொறாமையோடுதான் நோக்கினர்.

எனக்குச் சங்கடமாயிருந்தது. இப்படியே விட்டால் அவனது உளநிலை பாதிக்கப்பட்டுவிடும். வேறு பாடசாலைக்கு அவனை மாற்றுவது நல்லதெனப்பட்டது. அவனை அணுகி ஆறுதல் கூறினேன். வேறு பாடசாலைக்கு மாறி விடுமாறு வற்புறுத்தினேன். அவனோ அதைப் பொருட்படுத்தாமல் சிரித்தான்.

'சேர், நல்ல மனப்பாங்கு பற்றி இந்தச் சேர்தான் எனக்குச் சொல்லித் தந்தவர். என்னட்டை அது இருக்குது. இவரிட்டையும், மற்ற மாணவரிடத்திலையும் அது குறைவாக இருக்குப் போலை..... அதுக்காக நான் ஏன் மாற வேணும்" அவனது முதிர்ந்த வாhத்தைக@டே விழிகளின் தீட்சண்யம், ஒளிர்ந்து, சூரியக் கதிர்களாகப் பிரகாசித்து என்னை நிலை குலைய வைத்தது.