Tuesday, March 14, 2023

 ஊதிப் பெருப்பிக்கப்பட்ட விம்பங்களுடன் வாழவே


நீ விரும்புகிறாய் என்று மனச்சாட்சி சொன்னது.


அது ஒரு போதை.


 அது உன்னை என்றென்றைக்கும்


பற்றிப் படரும்.


யாரோ நட்ட விதைகள்


யார் யாரோ வளர்த்த பயிர்கள்


உன் ஆசீர்வாதத்தால் அறுவடையாகின என்று தவளைகள் கூக்குரலிடவும்


ஓணான்கள் வழிமொழியவும்


மிதக்கும் உன் போதையில்


திசைவழி மறந்து போனதாக


மனச்சாட்சி அலறிற்று. 

2020