Thursday, October 19, 2023

இயல்வாணன் பத்தி முன்றில் 16



 முன்றில் 16

இயல்வாணன்






மிஸ்டர் மலைவேம்பு பேசுகிறேன் இப்படியொரு பீடிகையுடன் சிறுகதையொன்று அமிர்தகங்கை சஞ்சிகையில் வெளிவந்திருந்ததுகதையின் தலைப்பு ஸ்கூல் பிளஸ் மினிபஸ் ரைம்ரேபிள்கள்.  இதை எழுதியவர் அப்போது யூனியன் கல்லூரியின் அதிபராக இருந்த  .பாலசுந்தரம்யூனியனில் நான் இடைநிலை வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன்அந்தக் கதை அந்த வயதிலேயே என்னை ஆகர்சித்திருந்ததுஅந்த மலைவேம்பு யூனியன் கல்லூரி வாசலில் பெருவிருட்சமாய்   நிழல் பரப்பி நின்றது.

  80களின் நடுக்கூறில் - இனவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகாலத்தில் - பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பிவிட்டு ஏங்கும் பெற்றோரின் மனநிலையை மிகத் தத்ரூபமாக அக்கதை வெளிப்படுத்தியிருந்ததுபின்னர் அக்கதை உட்பட 10 சிறுகதைகள்  தொகுக்கப்பட்டு அந்நிய விருந்தாளி என்ற தலைப்பில் யாழ் இலக்கிய வட்ட வெளியீடாக வெளிவந்தபோது அதைத் தேடி வாங்கி ஏனைய கதைகளையும் படித்தேன்உயர உயரும் அன்ரனாக்கள்முட்டைப் பொரியலும் முழங்கையும்மூன்று பரப்பும் முக்கால் குழியும் என்று ஒவ்வொரு கதைகளும் வித்தியாசமான தலைப்புகள் கொண்டவையாக அமைந்திருந்தன.

1928ஆம் ஆண்டு ஜனவரி 14 தைப்பொங்கல் தினத்தன்று ஆவரங்காலில் பிறந்த கதிர் பாலசுந்தரம் தனது ஆரம்பக் கல்வியை மூன்றாம் வகுப்பு வரை  மதவாச்சி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையிலும்,  ஆங்கில மொழி மூலக் கல்வியை புத்தூர் சோமஸ்கந்தக் கல்லூரியிலும் கற்றார்ஐந்தாம் தரத்துடன் கல்வியை இடைநிறுத்திக் கொண்டார்.  இரண்டாம் உலக யுத்தம் நடந்த காலத்தில்(1939-1945) திருகோணமலை சீனன்வாடி வான்படைத் தளத்தில் பொறியியலாளர்கள் நெய்பர்கிளாக் ஆகியோரின் அலுவலகத்தில் பணியாற்றினார்பின்னர் அங்குள்ள கிளப்பன்பேக்கில் (கடற்படை முகாம்வெள்ளை அதிகாரி கில் என்பவரின் அலுவலகத்தில் பணியாற்றினார்யுத்த முடிவைத் தொடர்ந்து 1946இல் சொந்த ஊரான ஆவரங்காலுக்குத் திரும்பிய இவர் மீண்டும் புத்தூர் சோமஸ்கந்தக் கல்லூரியில் படித்து எஸ்.எஸ்.சி (சிரேஷ்ட இடைநிலை தராதரப் பத்திரம்பரீட்சையில் சித்தியடைந்தார்.

1950ஆம் ஆண்டு தேர்தல் திணைக்களத்தில் 6 மாதங்கள் தற்காலிக பணியை ஆரம்பித்த இவர் பின்னர் இந்துபோட் நிர்வகித்த வவுனியா வடக்கிலுள்ள ஆயிலடி பாடசாலையில் ஆசிரியராகக் கடமையாற்றினார்ஓராண்டிற்குள் மட்டக்களப்பு ஒலுவில் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு இடம்மாறினார்அங்கு ஆறரை ஆண்டுகள் பணியாற்றினார்தொடர்ந்து ஆரையம்பதி மகா வித்தியாலயத்தில்(1958) புவியியல் பாட ஆசிரியராகப் பணியாற்றினார்.

1965இல் படிப்பு விடுமுறை பெற்று பேராதனை பல்கலைக்கழகத்தில் மூன்றாண்டுகள் படித்து கலைமாணி பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்தொடர்ந்து கேகாலை ஹெம்மாந்தகம அல் அஸார் மகா வித்தியாலயம்நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியூனியன் கல்லூரி ஆகியவற்றில் கற்பித்தார். 1977இல் யூனியன் கல்லூரியில் அதிபர் பதவியை ஏற்றுக் கொண்டார்அடுத்த ஆண்டில் இலங்கை கல்வி நிர்வாக சேவைப் பரீட்சையில் சித்தியடைந்தார்தொடர்ந்தும் அங்கேயே அதிபராகக் கடமையாற்றி 1987இல் ஓய்வு பெற்றார்இவரது காலத்தில் யூனியன் கல்லூரி புகழ் பூத்த பாடசாலையாக விளங்கியதுடன் .பொ..உயர்தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் கணிதத்துறையில் நா.சுகந்தன் முதலிடத்தைப் பெற்ற வரலாற்றுச் சாதனை அக்காலத்தில் நிகழ்ந்தது.

ஒலுவிலில் பணியாற்றிக் கொண்டிருந்த வேளை இவர் எழுதிய சிறுகதையொன்று தினகரனில் வெளியானதுவானொலி நாடகமொன்று இலங்கை வானொலியில் ஒலிபரப்பானதுதொடர்ந்து வானொலி நாடகங்கள் பலவற்றை எழுதினார்.  மேடைநாடகங்கள் கட்டுரைகள் பலவற்றையும் எழுதினார்.அமிர்தகங்கைசிரித்திரன்றோசாப்பூசிரித்திரன் ஆகியவற்றில் இவரது ஆரம்பகாலப் படைப்புகள் வெளிவந்தன.

இவரது சிறுகதைகள் அந்நிய விருந்தாளி(1986) என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளதுகதைகளை அமைக்கும் முறையிலே வெவ்வேறு உத்திகளைக் கையாண்டுள்ளார்பெரும்பாலும் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு உத்தியில் அமைந்துள்ளனபாத்திரங்களின் உரையாடலோடு கதையை நகர்த்திச் செல்லும் பண்பும்பாத்திரங்களின் உணர்வோட்டத்தினூடாகக் கதை சொல்லும் பண்பும் ஆசிரியருக்குக் கைவந்த கலையாக உள்ளமையை அவதானிக்க முடிகிறதுபொதுவாக இக்கதைகள் முழுவதையும் தொகுத்து நோக்கும் போது பாலசுந்தரம் அவர்களால் ஈழத்துச் சிறுகதைத் துறையில் புதிய வளர்ச்சி நிலைகளைப் புலப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது என இந்நூலுக்கு வழங்கிய அணிந்துரையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சு.வித்தியானந்தன் குறிப்பிட்டுள்ளமை நோக்கத்தக்கது

மறைவில் ஐந்து முகங்கள்(2004), வாரிசுகள்(2016), சிவப்பு நரிஅங்கத நாவல்(2004), கனடாவில் ஒரு சாவித்திரிவன்னி(2015) முதலான நாவல்களையும் இவர் எழுதியுள்ளார்ஆங்கிலத்தில் His Royal Highness, The Tamil Tigers(2011)> The Five Hidden Faces(2004)> The Militant’s Silence(2015), Blood and Terror ஆகிய நாவல்களையும் எழுதியுள்ளார்.

கல்வித்துறையில் தடம் பதித்த இவர் யூனியன் கல்லூரியில் அதிபராகக் கடமையாற்றிய கால அனுபவங்களை பொற்காலம் என்ற நூலில் தந்துள்ளார்அத்துடன் யூனியன் கல்லூரியின் இருநூறு ஆண்டுகால வரலாற்றை பல ஆதாரங்கள்ஆவணங்களுடன் தங்கத்தாரகை(2016) என்ற நூலாக எழுதியுள்ளார்அத்துடன் சிவதலம் என்ற தலைப்பில் ஆவரங்கால் கிராமத்தின் வரலாற்றையும் எழுதியுள்ளார்.

தமிழரசுக் கட்சியின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவராக விளங்கிய இவர் தமிழரசுக் கட்சித் தலைவர்கள் பற்றிய பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார்அவற்றில் அமிர்தலிங்கம் சகாப்தம்(2004), சாணக்கியன்கோப்பாய் கோமான் வன்னியசிங்கத்தின் நூற்றாண்டு மலர்(2011), ஆவணம்பல்வேறு இயக்கங்களால் தமிழரசுக் கட்சித் தலைவர்கள்தொண்டர்கள் கொல்லப்பட்ட ஆவணத் தொகுப்பு(2023),சத்தியங்களின்சாட்சியம்  முதலான நூல்களையும் பல கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார்.

1950களில் பேரறிஞர் அண்ணாத்துரையின் வேலைக்காரி நாடகத்தில் வில்லன் பாத்திரமேற்று நடித்ததுடன் வேறு பல நாடகங்களிலும் நடித்துள்ளார்பிரெஞ்சு நாடகமேதை மொல்லீரின் பறக்கும் டாக்டர் நாடகத்தை மொழிபெயர்த்து மேடையேற்றியுள்ளார்இவர் எழுதி மேடையேற்றிய சாம்பல் மேடுவிஞ்ஞானி என்ன கடவுளா?, விழிப்பு என்பன இவருக்குப் பெயர்தேடித் தந்த நாடகங்களாகும்.

இவ்வாறு கல்வித்துறையிலும்இலக்கியத்துறையிலும் தடம்பதித்த இவர் ஒரு காலத்தில் பிரபலமான ஆங்கில ஆசிரியராகவும் விளங்கினார்ஆங்கில இலக்கணத்தை தெளிவுறக் கற்பித்ததால் இவரது வீட்டில் நடைபெற்ற ஆங்கில வகுப்புகளில் மாணவர்கள் பெருமளவில் படையெடுத்துக் கற்றமையும் குறிப்பிடத்தக்கது.

95 வயதில் கனடாவில் வாழும் இப்பேரறிஞர் சகாப்தம் கண்டு தமிழுக்குச் சேவை செய்ய வேண்டுமென வாழ்த்துகிறோம்.

13-08-2023 உதயன் சஞ்சீவி


No comments:

Post a Comment