Thursday, July 25, 2019
கவிதை -இருள் விழுத்திய குரல்
காலம் விழுத்தியிருக்கிறது
சில துண்டு முட்களை,
நம் இதயத்தின் மீது.
சின்னனும் பெரியதுமாக
வலிமை மிக்கதாக
ஒவ்வொரு வடிவிலும் பெயரிலும்.
அவை
மனச்சாட்சியின் முனை வரை
ஊடுருவிப் பரவியிருக்கின்றன
சிலுவையில் அறையப்பட்டதாய்
நமது இதயம்
செயலற்றுத் தவிக்கின்றது.
கோபம் வரும்போது முடியவில்லை.
அவஸ்தைப்பட்டு
வெந்து மறுகிவிட்டுச் சோர்கிறது.
இரக்கமும் கூடவில்லை
வலி கொண்டு அழுதழுது தேறுகின்றது.
துடிப்பில் எந்த லயமும் இல்லை.
தன்னிருப்பைச்
சொல்லவும் வகையில்லை அதற்கு !
யாரிடமிருக்கின்றது
நைந்து போகாத ஒரு இதயம் ?
காலஞ் சபிக்காத
அந்த மனிதனைக் காண ஆசை.
சஞ்சீவி 01-11-1997
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment