விமான எதிர்ப்புப் பிரிவு வீரர்கள்
வருகிறார்கள்
பெருமிதம் தொனிக்க.
விழிப்பிருந்து இப்போது
இரண்டு விமானங்களை வீழ்த்தியிருக்கிறார்கள்.
சற்று ஓய்வெடுக்க வேண்டும் அவர்கள்.
அதற்கு முன்
அவர்களுடன் சேர்ந்து
‘இனி அச்சமில்லை’ பாடிக் களிப்போம்.
புண் சுமந்த மண்ணின்
துகள்களைப் பூசி ஆர்ப்பரிப்போம்.
ஒன்றாய் விருந்துண்போம்.
இனி,
விமானம் வீசிய குண்டுகள் எப்படியென்பதற்கு
சில மாதிரிகள் தேவை:
எங்கள் நூதனசாலைக்கு.
அவற்றையும் சேகரிக்கச் சொல்வோம்.
அதன் பின் ஓய்வெடுக்கட்டும்.
அடுத்த வெற்றிக்காக விழிப்பிருக்க வேண்டும்.
வானம் எம் வசம் கவிதைத் தொகுதி.
No comments:
Post a Comment