Monday, July 29, 2019

கவிதை -உலகம் உருண்டைதான்


உலகம் உருண்டை என்றாள்
சின்ன மகள்.

அது எவ்வளவு மகத்தானது என்றேன்
நான்.

இல்லை அது கோளம் போன்றது என்றாள்.
பின் 
கணித ரீதியாக கோளமல்ல என்றாள்.

எப்படியோ 
உருண்டையானது என்பதே 
எமக்குத் தெரிந்தது.
அதுவே மகத்துவமானது என்றேன்.

மனிதர்கள் திரும்பத்திரும்ப 
சந்திக்க நேர்வதும்
சம்பவங்கள் மீள மீள
நடந்தேறுவதும்
வரலாறு புரண்டு மீள்வதும்
உருண்டையினாலன்றோ!


தட்டையெனில்
முன்னோக்குடன் செல்பவர்கள்
சந்திக்கும் புள்ளியேது?

சம்பவங்கள் காலம் மாறி இடம் மாறி
 ஆள்கள் மாறி நடப்பது ஏன்?

வரலாறு முரண் கொண்டு உருவெடுப்பதேன்?

உலகம் உருண்டை என்பது 
மகத்துவமானதுதான் மகளே!
                                                                              
                                                                      2017

No comments:

Post a Comment