Thursday, July 25, 2019

கவிதை -எதிர் நீச்சல்


கண்வழி நடந்தேன்
கானலே எதிர்ப்பட்டது.

கால்வழி நடந்தேன்
தூரம் முடிவிலாதிருந்தது.

மனம் வழி நடந்தேன்
நிஜத்தைத் தொலைக்கலானேன்.

அடுத்தடுத்து
எப்படி நடப்பதென
என்னுள்ளே முரன்பட்டேன்.

ஈற்றில் 
எதிரென நடப்பதாய்
இசைவு கண்டேன்.

நடக்கிறேன்.
வாழ்க்கையும் நானுமாய்

No comments:

Post a Comment