ஒளிப்படம் : இயல்வாணன் |
போர் வீரர்கள் செப்பனிடுகிறார்கள்
தங்கள் துப்பாக்கிகளை
அடுத்த யுத்தத்துக்காக.
அரசியல்வாதிகள் ஈடுபடுகின்றனர்
பிரச்சாரப் பயிற்சியில்
அடுத்த தேர்தலுக்காக.
வணிகர்கள் ஒழுங்கமைக்கிறார்கள்
பண்டங்களையும் உத்திகளையும்
அடுத்த பண்டிகைக்காக.
ஊடகங்கள் தேடுகின்றன
குறைகளையும் இயல்பின்மையையும்
அடுத்த செய்தி அளிப்புக்காக.
தொண்டர்கள் காத்திருக்கிறார்கள்
அடுத்த பட்டத்துக்காகவும்
மடாலயத் தலைமைப் பதவிக்காகவும்.
கருமங்களைச் சுமந்தபடி அலையும்
மனிதர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்
அடுத்த சம்பளத் தேதியை.
தெருவோர நிழலில்
எந்த விவஸ்தையுமற்றுப் படுத்துறங்கும்
பிச்சைக்காரனது மனதில்
நாளைய யாசகத் தெருவின் வரைபடம்.
நடுகை மாசி-பங்குனி 2004
No comments:
Post a Comment