வண்ணங் குழைத்த மாலை
பொன்னின் குழியாய் கதிரோன்
அலை தவழும் கடல்
காற்றை உந்தும் புட்கள்
அழகழகாய் பூக்கள்
ஓய்வற்ற வெடியொலி.
மெய் பிளந்த பிணங்கள்.
முகமிழந்த வீடுகள்.
மகிழ் மறந்த மனிதர்கள்.
வண்ணங் கலைந்த மாலை.
கவிதை மாசி-பங்குனி 1995
No comments:
Post a Comment