Tuesday, July 23, 2019

கவிதை -முரண்





வண்ணங் குழைத்த மாலை

பொன்னின் குழியாய் கதிரோன்

அலை தவழும் கடல்

காற்றை உந்தும் புட்கள்

அழகழகாய் பூக்கள்



ஓய்வற்ற வெடியொலி.

மெய் பிளந்த பிணங்கள்.

முகமிழந்த வீடுகள்.

மகிழ் மறந்த மனிதர்கள்.

வண்ணங் கலைந்த மாலை.


             கவிதை மாசி-பங்குனி 1995

No comments:

Post a Comment