இது பூமரங்களின் காலம்.
விதவிதமாய் வருகின்றன
வண்ணத்துப் பூச்சிகள்.
அவை
முகர்ந்து முகர்ந்து
தேனருந்துகின்றன.
தேனின் சுவை குறித்துப் பெருமிதமாய்
பேசுகின்றன.
வண்ணத்துப் பூச்சிகள்
எப்போதும் வருவதில்லை.
பூக்கள்தான்
அவற்றை வரவழைக்கின்றன.
தேனற்ற பூக்களில்
அவை பெருமை கொள்வதில்லை.
பூக்கள் உதிர்ந்து காயாவன.
பூவுதிர்த்த மாற்றம்
பூமரங்களுக்கில்லை என்கின்றன
வண்ணத்துப் பூச்சிகள்.
தெரிதல் கார்த்திகை-மார்கழி 2005
No comments:
Post a Comment