காதைக் கூர்மைப்படுத்திக் கொள்.
உருவழிந்து போன அதன்
உள்ளிருந்தொரு பாடல் கேட்கிறது.
காதைக் கூர்மைப்படுத்திக் கொள்!
இறந்து போன வாழ்வை
அது முணுமுணுக்கிறது.
நிலவில் குளித்ததையும்
நெடுவானில் அலைந்ததையும்
மனதை அலைபாய்ச்சி
வாழ்வமைத்ததையும்
அழகான வரிகளில்
சொல்கிறது அப்பாடல்.
இனிப் பார்!
அதன் உருத் தெரியும்.
கவிதை மாசி-பங்குனி 1995

No comments:
Post a Comment