Wednesday, July 24, 2019

கவிதை -கற்றுக் கொள்ளல்



நான் கண்டேனில்லை
எப்போதும் 
சிட்டுக்குருவியின் சோக முகத்தை.

அதன் சந்தோசத்துக்கும் 
புலம்பலுக்கும்
வித்தியாசமென்ன?

சுமை மிகப் பொருள் கொணர்ந்து
கட்டிய கூட்டிலிருந்து
யன்னல் கம்பிகளுக்குள்ளிருக்கும்
என்னைப் பார்க்கிற
அதன் நோக்கு என்ன?

புரியவில்லை எனக்கு.

புரியும் போது 
நானும் வாழக்கூடும்.

              சஞ்சீவி 05-07-1997

No comments:

Post a Comment