திடீரென ஆயிற்று வெற்றிடம்.
வியளம் கேட்கும் காற்று
இடுக்கெல்லாம் நுழைந்து தேடியது.
வீட்டு நாய்கள்
கதவு தட்டி அழுதன.
தம்முள்
ஜீவனேற்றிய உருவற்று
உயிர்க்கூடுகள் நடந்தன.
ஒரு கணத்தில்
இல்லாமலாகிய துயர் சுமந்து
தேய்ந்தழிந்தது நிலவு.
அம்மா!
நமது ஞாபகங்களில் சுழன்று
செயல்களில் ஊடுருவி நிஜமாகையில்
எப்படியாகிடும் நினது வெற்றிடம்.
No comments:
Post a Comment