Monday, July 29, 2019

கவிதை -புரியாப் பாடல்


புரியாத பாடலைப் பாடிக் கொண்டிருக்கிறார்கள்
எல்லோரும்.

வார்த்தைகள் மாறுகின்றன.
வியாக்கியானங்கள் மாறுகின்றன.

அவரவர் நோக்கில் 
பாடிக் கொண்டிருக்கிறார்கள்.

என்ன நடந்தது?
ஏன் நடந்தது?
யாருக்கும் புரியவில்லை.

ஒரு சாரார் 
தங்கள் மதங்கள் கக்கியதை
மீள  வியாக்கியானப்படுத்தி 
பாடிக் கொண்டிருக்கிறார்கள்

மறு சாரார்
தங்கள் அரசியலுக்குப் பொருத்தமான
வார்த்தைகளைக் கோர்த்துப்
பாடிக் கொண்டிருக்கிறார்கள்

புரியாத பாடலை
புரிந்து கொண்ட தோரணையில்.

அவர்களது பாடல்
மதுவாய் ஊறி 
எல்லோரிலும் நிறைகிறது.

எல்லோரும் பாடுகிறார்கள்.

ஒவ்வொரு சுருதியிலும் ஸ்தாயியிலும்.

நாரசமாய் ஒலிக்கும் பாடலில்
கட்டி வைத்த இழைகள்
ஒவ்வொன்றாய் அவிழ்கின்றன.

                                         தாயகம் ஏப்ரல் - ஜுலை 2019

No comments:

Post a Comment