Saturday, July 27, 2019

கவிதை -எனது அப்பங்களை என்னிடமே தந்து விடு



உனது அப்பங்கள் உனக்குரியவை.
வேண்டாம் அவை எனக்கு.
எனது அப்பங்களை என்னிடமே தந்து விடு!

எனது பாட்டனும் தந்தையும் விதைத்த வயலில்
விளைந்த நெல்லாலானவை அவை.

உனது கோதுமை வயலில் விளைந்ததை
என்னிடம் திணிக்காதே.

எனது வயலில் கோதுமையை விதைத்து
காலகாலமாய் அது இருந்ததாகக் 
கதையளக்காதே!

எனது வயலில் விளைந்த நெல்லில்
எனக்கான அப்பங்களைத் தயாரித்துள்ளேன்.

என்னிடம் தந்து விடு
பறித்த எனது வயல்களையும் அப்பங்களையும்.

உனது அப்பங்கள் வேண்டாம் எனக்கு.
அது உயர்வாயினும்
அச்சுவை எனக்கு உவப்பல்ல.

திணிக்காதே அதனை.

                 தீபம் வாரமலர் 23-04-2017.

No comments:

Post a Comment