Wednesday, July 24, 2019

கவிதை -பாதுகாப்பு







மறுகி மறுகி
வாழ்வு முடிவதெனும் பொழுதில்தான்
நம்பிக்கை துளிர்க்கிறது.
பருந்துகளுக்கு பல குஞ்சுகளை
இரையாக்கிய பின்னரே
மிச்சத்தைக் காப்பாற்ற 
கோழிக்குச் சக்தி வந்தது.
அப்பா இப்போது வீட்டிலில்லை
பரந்த ‘நாயாற்று’ வெளியில்.

                கவிதை ஆவணி-புரட்டாதி 1994

No comments:

Post a Comment