Saturday, July 27, 2019

கவிதை -தொங்கும் இழைகள்


அவன் எனக்கு நண்பனாயிருந்தான்.
பல பொழுதுகளில்
பிரியாத பந்தமெனக் கதையளந்தோம்.

பரிவும் தண்மையும் பூத்த
இரு கிளைகளெனக் 
கற்பிதம் செய்தோம்.

ஒரு ஜீவனே 
நம்முள் புகுந்திருப்பதாய்
களி கூர்ந்தோம்.

பாடசாலையும் எங்கள் வீடுகளும்
வழுக்கியாற்று மதகும்
இன்ன பிறவும் நட்பின் இளைகளாயின.

ஒரு வசந்தப் பொழுதில்
அவனுக்குத் திருமணமாயிற்று.

அக்கணமே காணாமற் போனான்.

பின்,
நட்பின் இழைகள் அறுந்து தொங்கின.

எனதும் அவனதும் வீடாகவும்
பாடசாலையாகவும்
வழுக்கியாற்று மதகாகவும்
நானாகவும் அவனாகவும் கூட.

                                            சஞ்சீவி 31-01-1998

No comments:

Post a Comment