ஒரு கனத்த நாளென்று
அப்பு சொன்ன காலையில்
தெருவில் ஆடை கிழிந்து
ஏதோவொரு வெறியில்
திரியும் விசரனைப் போல்,
கட்டவிழ்த்துப் பாயும்
காளை மாடுகள் போல்,
வாலை நீட்டி அலையும்
தெரு நாய்கள் போல்,
வேலிகளைப் பிரித்தபடி
‘அது’கள் வந்தன.
மதியத்திற்குள் திரும்பின.
பின்,
கிராமத்திற்குள்
காயமடைந்த நாங்கள் சிலரும்
சடலங்கள் பலவும்
எரிந்து எஞ்சியிருந்தவையும்
மட்டுந்தான்!
கவிதை ஐப்பசி-கார்த்திகை1994

No comments:
Post a Comment