Tuesday, July 23, 2019

இராணுவ விஜயம்


ஒரு கனத்த நாளென்று 
அப்பு சொன்ன காலையில்
தெருவில் ஆடை கிழிந்து
ஏதோவொரு வெறியில் 
திரியும் விசரனைப் போல்,
கட்டவிழ்த்துப் பாயும் 
காளை மாடுகள் போல்,
வாலை நீட்டி அலையும்
தெரு நாய்கள் போல்,
வேலிகளைப் பிரித்தபடி
‘அது’கள் வந்தன.

மதியத்திற்குள் திரும்பின.

பின், 
கிராமத்திற்குள் 
காயமடைந்த நாங்கள் சிலரும்
சடலங்கள் பலவும்
எரிந்து எஞ்சியிருந்தவையும் 
மட்டுந்தான்!

                 கவிதை ஐப்பசி-கார்த்திகை1994

No comments:

Post a Comment