Saturday, July 27, 2019

கவிதை -யாரும் பாடலாம் என்னை


பாடுங்கள்!

உங்கள் நோக்கிலிருந்து
உங்கள் உணர்வேற்றி
உங்களுக்கான சொற்களுடன்
பாடுங்கள் என்னை!

மௌனத்தாலும் கண்ணீராலும் 
நிரம்பிய பாத்திரத்தில்
எனது உணர்வுகள் ஒடுங்கியுள்ளன.
நம்பிக்கைகளும் கனவுகளும்
புதைந்திருக்கும் கல்லறையில்
எனது மகோன்னதங்கள்
சிறை வைக்கப்பட்டுள்ளன.

முனைப்பின்றித் துயிலும்
சிறு புழு நான்.

கனவுகளும் நம்பிக்கைகளும்
கண்ணீரும் மௌனமும் கொண்ட
எனதுலகம் இருக்கட்டும்.

நீங்கள் பாடுங்கள்!

எப்படியேனும்
உங்கள் மொழிகளில்
உங்கள் கருத்தேற்றி.

                                           எதுவரை

No comments:

Post a Comment