ஒரு கோலம் போட்டல்லவா
நடந்து போனோம்!
திடீரென
புயற் சுழிப்பில்
சுழன்றறுந்து வீழ்ந்த நம் வாழ்வு
காலக் குருடன் காலடியில் கிடக்கிறது
நிலை மறந்து
திசை புரண்டு.
பாதங்களை ஊன்றி
குருடன் நடக்கிறான்
நம்மை நசித்து நசித்து.
திடீரென
எம்மி எம்பிக் குதிக்கிறான்.
முரட்டாட்டம் போடுகிறான்.
ஆங்காங்கே
உயிர்களை உருவியெடுத்து
வீதிகள் பற்றைகளில்
உடல்களை விழுத்திச் செல்கிறான்.
தனது பிரகடனங்களும் கட்டளைகளுமே
வாழ்வின் பயனென
உரத்துக் கூக்குரலிடுகிறான்.
உண்மையைத் தரிசிக்கும் வகையறியான்
ராஜாங்கம்
பரந்திருக்கிறது
நிழல் மீதும் நம் உடல் மீதும்.
வெளிச்சம் 1997
No comments:
Post a Comment